×

முன்னாள் படைவீரர்களுக்கு திறன் மேம்பாட்டு கருத்தரங்கு

கிருஷ்ணகிரி, அக்.18: கிருஷ்ணகிரியில் இன்று(18ம் தேதி) முன்னாள் படைவீரர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கு நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முப்படைகளிலும் பணி புரிந்து ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பிற்கு ஊக்குவித்திடும் பொருட்டு, 45 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் குறித்து மாவட்ட திறன் மேம்பாட்டுக் கழக உதவி இயக்குநருடன் கருத்தரங்கு கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இன்று(18ம் தேதி) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post முன்னாள் படைவீரர்களுக்கு திறன் மேம்பாட்டு கருத்தரங்கு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,District Collector ,Sarayu ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்!