×

பள்ளிகளில் பழைய, பழுதடைந்த கட்டடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்

சென்னை : பருவமழை தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு நடத்தினார்.

இன்று அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில், தற்போதைய வடகிழக்கு பருவமழை காலத்தில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு மருத்துவ உதவிகள், கட்டடங்களின் உறுதித் தன்மை உள்ளிட்ட தலைப்புகளில் ஆலோசனை வழங்கினார்.

மேலும், பருவமழையின் போது பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உறுதிபடுத்தவும், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பருவமழை காலங்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ளவும், பழைய மற்றும் பழுதடைந்த கட்டடங்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

The post பள்ளிகளில் பழைய, பழுதடைந்த கட்டடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahesh ,Chennai ,Education ,Anbil Mahes ,North East… ,
× RELATED ஆன்லைன் வகுப்புகளை ஒத்திவைக்க உத்தரவு: அமைச்சர் அன்பில் மகேஷ்!