×

ஸ்டெர்லைட் காப்பர் கழிவுகளை அகற்ற கோரிய வழக்கு: ஐகோர்ட் கிளை கேள்வி

தூத்துக்குடி உப்பாற்று பகுதியில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் காப்பர் கழிவுகளை அகற்ற உத்தரவிட கோரிய வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கின் நிலை என்ன? என நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் சேர்த்து பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணை அக்.23-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post ஸ்டெர்லைட் காப்பர் கழிவுகளை அகற்ற கோரிய வழக்கு: ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Tags : iCourt ,Tuticorin ,Court ,Dinakaran ,
× RELATED தவறான உறுதிமொழி தாக்கல் செய்வதை...