×

பெரம்பூர், வியாசர்பாடி சுந்தரம் மேம்பாலத்தில் மீண்டும் போக்குவரத்து துவக்கம்

பெரம்பூர்: பெரம்பூர், வியாசர்பாடி மேம்பாலத்தில் மீண்டும் போக்குவரத்து துவங்கியுள்ளது. சென்னையில் சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக பிரதான சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து மாநகராட்சி மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. வியாசர்பாடி சுந்தரம் மேம்பாலம் பகுதியில் தேங்கிய மழைநீர் முற்றிலும் அகற்றப்பட்டு இன்று காலை முதல் மீண்டும் போக்குவரத்து துவங்கியது. பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கிய மழைநீரும் முழுவதுமாக வெளியேற்றப் பட்டு இன்று காலைமுதல் போக்குவரத்து சீரானது. அவ்வழியாக வாகனங்கள் எந்தவித பிரச்னை இல்லாமல் சென்று வருகிறது.

வியாசர்பாடி ஜீவா மேம்பாலத்தில் தண்ணீர் இன்னும் முழுமையாக வடியாததால் அவ்வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. அம்பேத்கர் கல்லூரி சாலை, புளியந்தோப்பு பகுதியில் மழைநீர் இருப்பதால் ஜீவா வழியாக செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட பகுதியில் சிக்கும் என்பதால் வியாசர்பாடி ஜீவா மேம்பாலம் மூடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post பெரம்பூர், வியாசர்பாடி சுந்தரம் மேம்பாலத்தில் மீண்டும் போக்குவரத்து துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Vyasarpadi Sundaram ,Vyasarpadi ,Chennai ,Dinakaran ,
× RELATED ஓசியில் சிக்கன் ரைஸ் கேட்டு...