×

சிறுமி பலாத்காரம்: வாலிபருக்கு 9ஆண்டு சிறை

 

சிவகங்கை, அக்.16: சிங்கம்புணரி அருகே கள்ளர்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி குமார்(30). இவர், 9வயது சிறுமியை கடந்த 9.7.2019 அன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன், குற்றம்சாட்டப்பட்ட குமாருக்கு 9ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.4லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

The post சிறுமி பலாத்காரம்: வாலிபருக்கு 9ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Farmer Kumar ,Kallarpatti ,Singampunari ,Tirupattur All Women Police ,
× RELATED தமிழில் பெயர்ப்பலகை இல்லாத 9 கடைகளுக்கு அபராதம்