×

தஞ்சை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்


தஞ்சை: தஞ்சையிலிருந்து – சென்னைக்கு பகல் நேர ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது. தஞ்சை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தஞ்சையிலிருந்து – சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து, இன்று முதல் தஞ்சை வழியாக தாம்பரத்திற்க்கான ரயில் தஞ்சை வந்ததையடுத்து, தஞ்சை ரயில் நிலையத்தில் தஞ்சை எம்.பி முரசொலி தலைமையில் ஏராளமானோர் உற்சாகமாக வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாடினர்

தஞ்சையிலிருந்து சென்னைக்கு பகலில் ரயில் இயக்க வேண்டும் என்பது தஞ்சை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த நிலையில் இன்று முதல் திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக தாம்பரத்திற்கு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ள நிலையில்

திருச்சியில் இருந்து அதிகாலை 5 .35 மணிக்கு புறப்பட்டு தஞ்சைக்கு 6. 25 க்கு வந்தடையும் ரயில் கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியாக தாம்பரத்திற்கு மதியம் 12 .10 மணிக்கு சென்றடையும்,
மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து மாலை 3.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 க்கு தஞ்சை வந்தடையும்

புதிய ரயில் இன்று திருச்சியில் 5.35 க்கு புறப்பட்டு தஞ்சைக்கு 6.25 க்கு வந்த ரயிலை தஞ்சை எம்.பி முசொலி உள்ளிட்ட ரயில் பயணிகள் இனிப்பு வழங்கி உற்சாகமாக வரவேற்றனர் இந்த ரயில்சேவை திங்கள், வியாழன் தவிர வாரத்தின் 5 நாட்கள் இயக்கப்பள்ளது

The post தஞ்சை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : THANJAI ,THANJAYA ,CHENNAI ,Tanji ,Tanaji ,
× RELATED தொடர் திருட்டு: 3 டிப்-டாப் கொள்ளையர்கள் கைது