×

வீட்டில் நூலகம் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சேலம், அக்.10: சேலம் மாவட்டத்தில் உள்ள வாசகர்களை ஊக்குவிக்கும் வகையில் வீடுகளில் நூலகம் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, மாவட்டம் தோறும் புத்தக திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்து பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விருது வழங்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தனிநபருக்கு சேலம் மாவட்டத்தில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியில் சொந்த நூலகங்களுக்கு விருது, ₹3 ஆயிரம் மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது வீட்டில் உள்ள நூலகத்தில் எத்தனை நூல்கள் உள்ளன. எந்த வகையான நூல்கள் மற்றும் அரிய நூல்கள் விவரம் என்பன உள்ளிட்ட விவரங்களுடன், பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, வரும் 20ம்தேதிக்குள் இ-மெயில் முகவரிக்கும் மற்றும் மாவட்ட நூலக அலுவலர், மாவட்ட நூலக அலுவலகம், சேரராஜன் சாலை, அஸ்தம்பட்டி, சேலம் 636-007 என்ற முகவரிக்கும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

The post வீட்டில் நூலகம் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem district ,Tamil Nadu government ,
× RELATED ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்த மோட்டார் வாகன ஆய்வாளர் கைது