×

பெண்ணை தாக்கிய இருவர் மீது வழக்கு

 

வடமதுரை, அக். 9: வடமதுரை அருகேயுள்ள தென்னம்பட்டி கிராமம் கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் லெட்சுமி (42). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் (35) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த அக்.4ம் தேதி லெட்சுமி தனது தோட்டத்தில் இருந்த மின்மோட்டாரை ஒரு பிட்டர் மூலம் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கனகராஜ், இந்திராணி ஆகியோர் தோட்டத்தில் தங்களுக்கும் பங்கு உள்ளது. அதனால் மோட்டார் வேலை செய்ய கூடாது என கூறி தகராறு செய்து லெட்சுமியை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த லட்சுமி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து லெட்சுமி வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ சித்திக் கனகராஜ், இந்திராணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post பெண்ணை தாக்கிய இருவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Vadamadurai ,Letsumi ,Karatupatti ,Thennampatti ,Kanagaraj ,
× RELATED கணவரின் ஜீப், கலவை இயந்திரங்கள்...