×

செந்துறையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

 

அரியலூர், அக்.8: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு செந்துறை உட்கோட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் வடிவேல் உத்திரவின்படி ,செந்துறை உட்கோட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.அதன்படி செந்துறை உட்கோட்ட பொறியாளர்கள் முன்னிலையில் மணல் மூட்டைகள் கட்டி சேகரிக்கும் பணி,கருவிகள் மற்றும் தளவாடங்கள் சீர் செய்யும் பணி,மற்றும் மழைக்காலங்களில் கல்வெட்டுகளில் மழைநீர் தேங்கா வண்ணம் நீர் வழிப்பாதையை சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

The post செந்துறையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Sentura ,Ariyalur ,Sentura Ingot ,Vadivel Uttar ,Ariyalur Highway Construction and Maintenance Engineer ,Sentura Inlet ,
× RELATED அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி