×

தூத்துக்குடி போல்டன்புரத்தில் புதிய வடிகால் அமைக்கும் பணிகள்

 

தூத்துக்குடி, அக் 7: தூத்துக்குடி போல்டன்புரத்தில் புதிய வடிகால் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்டன்புரம் பகுதியில் புதிய வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. எதிர்வரும் மழைக்காலத்தை முன்னிட்டு இந்த பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது திமுக வட்ட பிரதிநிதி துரை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.

The post தூத்துக்குடி போல்டன்புரத்தில் புதிய வடிகால் அமைக்கும் பணிகள் appeared first on Dinakaran.

Tags : Boltonpuram, Thoothukudi ,Thoothukudi ,Mayor ,Jagan Periyasamy ,Boldanpuram ,Thoothukudi Municipal Corporation ,Dinakaran ,
× RELATED தட்டார்மடம் பகுதியில் திடீர் மழை