×

காஞ்சிபுரத்தில் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: முதல்வருக்கு நன்றி தீர்மானம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பவளவிழா மாளிகையில் நேற்று மாலை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் இனியரசு தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் ஜி.செல்வம் எம்பி, கோகுலகண்ணன், மலர்விழி குமார், மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்று சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பிறந்த பேரறிஞர் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட திமுகவின் பவளவிழா பொதுக் கூட்டத்தை, காஞ்சிபுரத்திலேயே பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் விதத்தில் நடத்துவதற்கு திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாய்ப்பு வழங்கியது மிக்க மகிழ்ச்சி. இதற்காக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக நன்றி தெரிவித்து கொள்கிறது. மேலும், கூட்டம் முடிந்த சில நிமிடங்களில், தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய, தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை அறிவித்து, அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியதற்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு காஞ்சி தெற்கு மாவட்ட திமுக நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை காஞ்சி தெற்கு மாவட்ட திமுக வணங்கி வாழ்த்துகிறது.

இந்த பவளவிழா பொதுக்கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சி தெற்கு மாவட்ட திமுகவின் அனைத்து நிர்வாகிகள், இக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், எம்பி மற்றும் எம்எல்ஏக்கள், மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், பகுதி, வார்டு, கிளை நிர்வாகிகள் அனைவருக்கும் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் எழிலரசன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.அரசு, ஒன்றியக்குழு பெருந்தலைவர் தேவேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் சுகுமார், நாராயணன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளிக்காடு ஏழுமலை, சசிகுமார், சிகாமணி, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், கெ.ஞானசேகரன், சாலவாக்கம் டி.குமார், சேகர், குமணன், கே.கண்ணன், ஜி.தம்பு, பொன்.சிவகுமார், சரவணன், ஏ.சிற்றரசு, எம்.எஸ்.பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், பேரூர் செயலாளர்கள் பாரிவள்ளல், பாண்டியன், சுந்தரமூர்த்தி, எழிலரசன், மோகன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post காஞ்சிபுரத்தில் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: முதல்வருக்கு நன்றி தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : South ,District ,DMK ,Working Committee ,Kanchipuram ,Chief Minister ,Kanchipuram South District DMK Executive Committee ,Pawalavizha House ,District Assembly Chairman ,Iniyarasu ,District Deputy Secretaries ,G. Selvam MP ,Gokulakannan ,Malarvizhi Kumar ,District Treasurer ,South District DMK Working Committee Meeting ,
× RELATED வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை...