×

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: நாளை உண்ணாவிரதம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவ சங்க பிரதிநிதிகளின் அவசர ஆலோசனை கூட்டம், மீனவ சங்க தலைவர் ஜேசுராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலுக்கு சென்ற 17 மீனவர்கள் கைதாகியுள்ளனர்.

2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே கைதான 150க்கும் அதிகமான மீனவர்களில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடும் தண்டனை பெற்று சிறையில் வாடி வருகின்றனர். இலங்கை சிறையிலுள்ள மீனவர்களையும், படகுகளையும் ஒன்றிய அரசு மீட்டு தரக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மீனவர்கள் பிரச்னைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி நேற்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளனர். நாளை (அக்.3) தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஒன்றிணைந்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.

The post இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: நாளை உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lanka ,Sri Lankan Navy ,president ,Jesuraj ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது!