×

பண்டிகைக் காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக்கழகம் புதிய திட்டம்

சென்னை: தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் பேருந்துகளில் வட மாவட்ட பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக்கழகம் புதிய திட்டமிட்டுள்ளது. வழக்கமாக, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப்பேருந்துகளை சிறப்புப் பேருந்துகளாக இயக்குவதால், ஊரகப் பகுதி மக்கள் பாதிப்படைவதால் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து, அதற்கு ஓட்டுநர், நடத்துநரை அரசே நியமித்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து குறிப்பிட்ட ஊர்களுக்கு எத்தனை நடை பேருந்து இயக்கப்படுகிறது என்ற அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு கட்டணம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post பண்டிகைக் காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக்கழகம் புதிய திட்டம் appeared first on Dinakaran.

Tags : Transport Association ,Chennai ,Northern District ,Diwali ,Pongal ,
× RELATED பண்டிகைக் காலங்களில் தனியார்...