×

சிறுமி பலாத்கார கொலை வழக்கில் கைதானவர் சிறையில் தற்கொலை: புதுவை அதிகாரிகள் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை, சோலை நகர் பகுதியில் கடந்த மார்ச் மாதம், 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வழக்கு தொடர்பாக சோலை நகர் விவேகானந்தன் (56) மற்றும் கருணாஸ் (19) ஆகியோரை போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்து கைது செய்த போலீசார், கடந்த மார்ச் 5ம்தேதி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட இருவருமே பலமுறை சிறையில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்ட நிலையில் இவர்களை கண்காணிப்பதற்காகவே தனியாக காவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இருப்பினும் தொடர்ந்து விவேகாந்தன் பல்வேறு வகையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

குறிப்பாக சோப்பை சாப்பிடுவது, சட்டையால் கழுத்தை இறுக்கிக் கொள்வது என பல வகைகளில் தொடர்ந்து தற்கொலை முயற்சி செய்து வந்த நிலையில் காவலர்கள் அவரை மீட்டு பாதுகாப்பு அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை விவேகானந்தன் சிறையில் உள்ள கழிப்பறையில் துண்டால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சட்டம்- ஒழுங்கு சீனியர் எஸ்.பி. நாரா சைத்னயா, கிழக்கு எஸ்.பி. லட்சுமி சவுஜன்யா உள்ளிட்டோர் சிறைக்கு சென்று பார்வையிட்டனர். இதனிடையே சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரனுடன், ஐஜி அஜித்குமார் சிங்லா காணொலி மூலம் இச்சம்பவம் குறித்து கேட்டறிந்தார். வருகிற 19ம்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறை காவலரிடம் ‘மிகவும் குளிர்கிறது’ என்று விவேகானந்தன் துண்டு கேட்டு வாங்கிஅதில் தூக்கிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post சிறுமி பலாத்கார கொலை வழக்கில் கைதானவர் சிறையில் தற்கொலை: புதுவை அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Puduwai ,Puducherry ,Muthialpet, Cholai Nagar ,Vivekanandan ,Cholai Nagar ,
× RELATED புதுவை கவர்னருடன் நடிகர் விஜய் சேதுபதி சந்திப்பு