×

குடிநீர் வாரியம் சார்பில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது

சென்னை, செப்.13: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர் கூட்டம், மாதம்தோறும் 2வது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான குறைதீர் கூட்டம், நாளை (14ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post குடிநீர் வாரியம் சார்பில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Drinking Water Board ,Chennai ,Chennai Water Board ,
× RELATED ஈசிஆரில் திருவான்மியூர் முதல் அக்கரை...