×

சீதாராம் யெச்சூரியின் மறைவு வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; இடதுசாரி இயக்கத்தின் தலைவரும், இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையுமான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. மாணவர் பருவத்திலேயே அச்சமற்ற தலைவராக அவசர நிலை சட்டத்துக்கு எதிராக நின்றவர்.

தொழிலாளி வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான விழுமியங்களுக்கான அவரது அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post சீதாராம் யெச்சூரியின் மறைவு வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Sitaram Yechury ,Chief Minister ,M K Stalin ,Chennai ,M. K. Stalin ,General Secretary of the Communist Party of India ,Comrade ,Left Movement ,M.K.Stal ,
× RELATED சீதாராம் யெச்சூரி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்