×

தண்டையார்பேட்டையில் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்: செல்வப்பெருந்தகை பங்கேற்கிறார்

சென்னை: வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீர்கள் கூட்டம், நிர்வாகிகளுடன் கலந்தாய்வு சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள கேப்டன் மஹாலில் நாளை மாலை நடைபெறுகிறது. கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமை வகிக்கிறார். தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி துவக்க உரையாற்றுகிறார். மாவட்ட பொருளாளர் சுரேஷ் குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணலி தீர்த்தி, சர்க்கிள் தலைவர் ஆர்.கே.நகர் சையத் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கூட்டத்தில், முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வீ.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி, கிருஷ்ணசாமி மற்றும் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ராஜேஷ் குமார், பொருளாளர் ரூபி மனோகரன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், எம்.எல்.ஏ.க்கள் அசன் மவுலானா, துரை சந்திரசேகர், ஊர்வசி அமிர்தராஜ் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் திரளான காங்கிரசார் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்கும் படி மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரசார் செய்து வருகின்றனர்.

 

The post தண்டையார்பேட்டையில் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்: செல்வப்பெருந்தகை பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Tags : North Chennai East District ,Congress ,Thandaiarpet ,Selvaperunthakai ,CHENNAI ,North ,Chennai East District Congress Committee ,Captain Mahal, Thandaiyarpet, Chennai ,Tamil Nadu Congress ,President ,North Chennai East District Congress Workers Meeting ,
× RELATED முன்னாள் காஞ்சிபுரம் எம்பி...