×

தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்க சாவடிகளுக்கு கட்டணம் அறிவிப்பு

செஞ்சி, செப். 6: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நங்கிலி கொண்டான், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம் ஆகிய 3 இடங்களில் சுங்கச்சாவடிகளுக்கான கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை த்துறை ஆணையம் அறிவித்துள்ளது.விழுப்புரம் நங்கிலிகொண்டான் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்றுவர ரூ.60 முதல் ரூ.400 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.95 முதல் ரூ.600 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வர ரூ.55 முதல் ரூ.370 வரை சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.85 முதல் ரூ.555 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.

The post தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்க சாவடிகளுக்கு கட்டணம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : National Highway ,Senji ,National Highways Authority ,Villupuram district ,Senchi ,Nangili Kondan ,Krishnagiri district ,Nagampatti ,Thiruvannamalai district ,Kariyamangalam ,Villupuram ,Nanglikondan ,
× RELATED உதகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளும் பாலம் கட்டும் பணி தொய்வு