×

செப்.11ல் மக்கள் தொடர்பு முகாம்

சிவகங்கை, செப். 6: காரைக்குடி அருகே ஆம்பக்குடி கிராமத்தில் செப்.11 அன்று மக்கள் தொடர்பு முகாம் நடக்க உள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:காரைக்குடி தாலுகா, ஆம்பக்குடி கிராமத்தில், செப்.11ம் தேதி காலை 10.00 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. அரசுத் துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே முகாமின் நோக்கமாகும். எனவே, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு, பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post செப்.11ல் மக்கள் தொடர்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Mass Communication Camp ,Sivagangai ,Ampakkudi ,Karaikudi ,Collector ,Asha Ajith ,Ambakudi village ,
× RELATED நாளை ரேசன் குறைதீர் கூட்டம்