×

நெஞ்சுவலியில் மகன் இறந்ததால் மகளுடன் தாயும் தூக்கிட்டு தற்கொலை

நெல்லை: மகன் நெஞ்சுவலியில் இறந்த துக்கம் தாங்காமல் தாய், தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.நெல்லை அடுத்த தாழையூத்து அருகே கீழதென்கலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (42). கொத்தனார். மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கிருஷ்ணனின் தாய் பகவதி (எ) மூக்கம்மாள்(75) அதே ஊரில் வடக்கு தெருவில் வசித்து வந்தார். அவருடன் கணவரை பிரிந்த மகள் மாலாவும் (32) வசித்துள்ளார். கிருஷ்ணன் தனது தாய் மற்றும் தங்கைக்கு அவ்வப்போது பணம் கொடுத்து வந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் கிருஷ்ணன் நெஞ்சுவலியால் இறந்தார். அதை கேட்டு பதறியடித்து தாய் பகவதியும், தங்கை மாலாவும் அங்கு வந்து கதறி அழுதனர். நள்ளிரவில் தங்கள் வீட்டுக்கு சென்ற இருவரும் துக்கம் தாளாமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். உறவினர்கள் வந்து பார்த்தபோது தாயும், மகளும் தூக்கில் பிணமாக தொங்குவது தெரிந்தது. இதுகுறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

The post நெஞ்சுவலியில் மகன் இறந்ததால் மகளுடன் தாயும் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Krishnan ,Kizhathenkalam ,Thalaiuthu ,Mason ,Krishna ,Bhagwati (A) Mookammal ,
× RELATED நெல்லையில் 10ஆம் வகுப்பு மாணவரின் பையில் இருந்து அரிவாள் பறிமுதல்