×

டூவீலர் எரிந்து நாசம்

சேலம், ஆக.2: சேலம் மரவனேரி 3வது கிராசில் வசிப்பவர் சீனிவாசன் (45). இவர் நேற்றுமுன் தினம் வீட்டின் போர்டிகோவில் தனது டூவீலரை நிறுத்தியிருந்தார். நள்ளிரவு 1.30 மணியளவில் டூவீலர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தண்ணீரை ஊற்றியும் உடனடியாக அணைக்க முடியவில்லை. இதுபற்றி செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் டூவீலர் எரிந்து நாசமானது. தீவிபத்திற்கான காரணம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலர் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Srinivasan ,Maravaneri ,3rd ,Cross, Salem ,
× RELATED திருச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பைனான்ஸ் புதிய கிளை திறப்பு விழா