×

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் உயிரிழப்பு: 2பேர் மாயம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று 400க்கு மேற்பட்ட படகுகளுடன் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையானது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் விசைப்படகுகள் மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியது. இதில் விசைப்படகில் இருந்த 5 மீனவர்கள் தவறி கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் இலங்கை கடற்படையினர் 3 பேரை மீட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது உடல் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கப்பல் மொதோயத்தில் படுகாயமடைந்த இருவரும் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு, புங்குடுதீவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து காணாமல்போன 2 மீனவர்களை தேடும் நடவடிக்கையிலும் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். படகில் இருந்த மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்ற மீனவர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை என உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

The post இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் உயிரிழப்பு: 2பேர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Navy ,Lankan Navy ,Kachathivu ,Sri Lanka Navy ,Dinakaran ,
× RELATED தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு