×

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.51,440க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.51,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.6,430க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.91.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வந்தது. இந்நிலையில், பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு 22 ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம். சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 1) ஒரு சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.51,440-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10 அதிகரித்து ரூ.6,430க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.51,440க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...