×

நிலச்சரிவு தொடர்பாக கேரளாவில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்

வயநாடு: வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் நாளை காலை 11.30 மணிக்கு கேரள அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. நிலச்சரிவு பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கேரள எம்.பி.க்கள் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளனர். மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக ரூ.5,000 கோடியை விடுவிக்க வேண்டும் என்றும் கேரள எம்.பி.க்கள் வலியுறுத்தியிருந்தனர்.

The post நிலச்சரிவு தொடர்பாக கேரளாவில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Wayanadu ,Kerala All-Party ,Governor's Office ,
× RELATED வயநாட்டில் நிலச்சரிவால்...