×

ஒற்றை யானை தாக்கி கோவில் பூசாரி காயம்

 

கோவை, ஜூலை 29: கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு அருகே விராலியூர் என்ற பகுதியில் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பாஸ்கரன் (55) என்பவர் பூசாரியாக உள்ளார். நேற்று வழக்கம்போல கோவில் பூஜைகளை முடித்துவிட்டு இரவு 8 மணிக்கு பாஸ்கரன் வீடு திரும்பினார். அப்போது அவர் வரும் வழியே புதர்களுக்கு இடையே மறைந்து இருந்த ஒற்றை காட்டு யானை பாஸ்கரனை தாக்கியது.

இதில் பாஸ்கரனின் 2 கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பாஸ்கரனை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துமனைக்கு சொண்டு செல்லப்பட்டார்.

The post ஒற்றை யானை தாக்கி கோவில் பூசாரி காயம் appeared first on Dinakaran.

Tags : KOWAI ,PERUMAL ,VIRALIUR ,KOWAM BOLUWAMBATI VANACHARAGAM ,Paskaran ,Dinakaran ,
× RELATED கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவு...