- திடீர் தீ
- தைலமராகாட்
- கரம்பாக்குடி
- தமரகத்
- புதுவலசல்
- ஜீவா
- புதுவலசல்
- கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
- தின மலர்
கறம்பக்குடி, ஜூலை 25: கறம்பக்குடி அருகே புதுவலசலில் விவசாயிக்கு சொந்தமான தைலமரக்காட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே புதுவலசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா, விவசாயி. இவருக்கு சொந்தமான தைல மர காடு நேற்று மாலை தீ பிடித்து எரிவதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தைல மரக்காட்டில் தீப்பிடித்து எரிந்ததை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனால் தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
The post கறம்பக்குடி அருகே தைலமரக்காட்டில் திடீர் தீ appeared first on Dinakaran.