- அமைச்சர்
- உதயநிதி
- சென்னை
- பிரதீப் சங்கர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை
- கண்மணி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: பன்னாட்டு அளவிலான சைக்கிள் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய சைக்கிள் வீரர் பிரதீப் சங்கருக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பாக ரூ.16 லட்சம் மதிப்பிலான சர்வதேச தரத்திலான சைக்கிளும், தமிழக தேசிய வில்வித்தை வீராங்கனை கண்மணிக்கு போட்டிகளில் பங்கேற்க ரூ.2.8 லட்சம் மதிப்பில் சர்வதேச தரத்திலான வில்வித்தை உபகரணமும், உலக பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மகாராஜாக்கு அமெரிக்காவில் உயர்தர பயிற்சி பெற ரூ.1.20 லட்சத்திற்கான காசோலையையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். மேலும், ஆசிய பெண்கள் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் 2024ல் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை அனுபமா, ஆசிய பென்சிங் கான்பெடரேஷன் ஆணையத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியரான வாள்வீச்சு வீராங்கனை மரியா அக்ஷிதா வாழ்த்து தெரிவித்தார். அப்போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உடனிருந்தார்.
The post வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து appeared first on Dinakaran.