×

சென்னைக்கு ஆட்டோவில் கடத்தி சிறுமி பலாத்காரம்: டிரைவர் போக்சோவில் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த அப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(30), ஆட்டோ டிரைவர். இவரது தங்கையின் தோழியான 17 வயது சிறுமி சேத்துப்பட்டில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் விஜய்யின் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். அப்போது, விஜய் அந்த மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்கிடையில், விஜய்க்கும் வேறொரு பெண்ணிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. ஆனால், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில்மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டாராம்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிறுமி கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே வந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஆட்டோவில் சென்னைக்கு கடத்தி சென்றுள்ளார். பின்னர், அங்குள்ள விடுதியில் தங்க வைத்து, பாலியல் பலாத்காரம் செய்ததோடு, சிறுமியுடன் பல ஊர்களுக்கு சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று சேத்துப்பட்டு பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த சிறுமி மற்றும் ஆட்டோ டிரைவர் விஜயை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர், போக்சோவில் விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post சென்னைக்கு ஆட்டோவில் கடத்தி சிறுமி பலாத்காரம்: டிரைவர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pocso ,Thiruvannamalai ,Vijay ,Appedu village ,Sethupattu ,Tiruvannamalai district ,Sethupat ,
× RELATED புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழப்பு..!!