×

வெள்ளக்கோவில் மார்க்கெட்டில் முருங்கை கிலோ ரூ.40க்கு விற்பனை

 

வெள்ளக்கோவில், ஜூன் 4: வெள்ளக்கோவில் முருங்கை மார்க்கெட்டுக்கு 4 டன் வரத்து வந்த நிலையில் கிலோ ரூ. 40 விற்பனையானது. தமிழகத்தில் கொடி முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை, செம்முருங்கை என நான்கு வகை முருங்கைகள் உள்ளன. இவற்றில், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில், முத்தூர், காங்கயம், புதுப்பை பகுதிகளில் செடி முருங்கை, மரமுருங்கை ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

வெள்ளகோவிலில் இயங்கும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு, சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கை காயை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனை, வியாபாரிகள் வாங்கி கோவை, சென்னை மார்க்கெட்டுக்கு அனுப்புகின்றனர். மேலும், அருகில் உள்ள ஒட்டன்சத்திரம் மார்கெட்டுக்கும் விவசாயிகள் முருங்கையை விற்பனைக்கு கொண்டு செல்வர். 4 டன் வரத்தான மரமுருங்கை ரூ. 20 க்கும், செடி முருங்கை ரூ. 34க்கும், கரும்பு முருங்கை ரூ. 40க்கும் விற்பனையானது.

The post வெள்ளக்கோவில் மார்க்கெட்டில் முருங்கை கிலோ ரூ.40க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Vellakoil ,Vellakovil ,Moringa ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்