×

இரு நாட்களாக மழை குறைந்தது மலர் கண்காட்சி, பழக் காட்சியை உற்சாகமாக கண்டு ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்

 

ஊட்டி,மே26: ஊட்டியில் இரு நாட்களாக மழை குறைந்த நிலையில், சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி ஆகியவைகளை கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.சமவெளிப் பகுதிகளில் வெயில் வாட்டியெடுக்கும் நிலையில், குளு குளு காலநிலையை அனுபவிக்க ஊட்டி வருவதை வாடிக்யைாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், மே மாதம் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும்,குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சியும், கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியும் நடத்தப்படுவது வழக்கம். இம்முறை பாராளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த 10ம் தேதி மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி ஆகியவை துவங்கியது.

மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.மேலும், மாடங்களில் 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி துவங்கிய மழை தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்தது.

இதனால், சுற்றுலா பயணிகள் அனைத்து சுற்றுலா தலங்களையும் முழுமையாக கண்டு ரசித்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக ஊட்டியில் மழை குறைந்துள்ளது. இதனால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் உள்ள மலர் கண்காட்சியை கண்டு ரசித்து செல்கின்றனர். அதேபோல், நேற்று முன்தினம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் துவங்கிய பழக்கண்காட்சியையும் கண்டு ரசித்து சென்றனர்.

The post இரு நாட்களாக மழை குறைந்தது மலர் கண்காட்சி, பழக் காட்சியை உற்சாகமாக கண்டு ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris district ,
× RELATED ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில்...