×

பருப்பு இறக்குமதி அனுமதியை ஒன்றிய அரசு மாற்றியதால் பல லட்சம் பேர் பாதிப்பு: சபாநாயகர் அப்பாவு


சென்னை: தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெற்றுவந்த பருப்பு இறக்குமதி குஜராத் துறைமுகத்துக்கு ஒன்றிய அரசு மாற்றம் செய்துள்ளது. பருப்பு இறக்குமதி அனுமதியை ஒன்றிய அரசு மாற்றியதால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு வைத்துள்ளார். தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெற்றுவந்த பருப்பு இறக்குமதியால் ஆயிரக்கணக்கான மாவு மில்கள் பயன்பெற்று வந்தன. மாவு மில்கள் மற்றும் பருப்பு இறக்குமதி தொழிலை நம்பி இருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றிய அரசின் முடிவால் வேலையிழந்துள்ளனர். தமிழ்நாட்டு வளங்களைத்தான் ஒன்றிய அரசு வேறு மாநிலத்துக்கு மாற்றியுள்ளதே தவிர பிற மாநிலங்களின் வளங்கள் தமிழ்நாட்டுக்கு வந்ததில்லை.

The post பருப்பு இறக்குமதி அனுமதியை ஒன்றிய அரசு மாற்றியதால் பல லட்சம் பேர் பாதிப்பு: சபாநாயகர் அப்பாவு appeared first on Dinakaran.

Tags : Union government ,Speaker ,Appavu ,CHENNAI ,Thoothukudi port ,Gujarat port ,Appa ,Dinakaran ,
× RELATED மாஞ்சோலை தேயிலை தோட்ட பிரச்னை...