×

தேர்தல் பத்திர முறைகேடு: எஸ்ஐடி விசாரணை கோரி வழக்கு

டெல்லி: தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பொதுநல வழக்குகள் மையம் மற்றும் பொதுநலன் ஆகிய அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஈ.டி., ஐ.டி. விசாரணையில் சிக்கிய பல நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்துள்ளதால் விரிவான விசாரணை தேவை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முக்கிய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஊழலுக்கு துணை போயிருப்பதாகவும் மனுவில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

The post தேர்தல் பத்திர முறைகேடு: எஸ்ஐடி விசாரணை கோரி வழக்கு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Supreme Court ,Special Investigation Committee ,Public Interest Litigation Center ,Public Interest. ED ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...