×

பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்

மதுரை: பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படாமல் உள்ளன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு, தனியார் பேருந்துகளின் விவரங்கள் என விரிவான விவரங்களுடன் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. உள்துறை செயலாளர், போக்குவரத்துத் துறை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டது.

The post பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : ICourt ,Madurai ,High Court ,Tamil Nadu ,ICourt branch ,Dinakaran ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...