×

ஸ்கூட்டரில் குட்கா கடத்திய 2 பேர் கைது

ஓசூர்,ஏப்.23: ஓசூர் சிப்காட் போலீசார், ஜூஜூவாடி சோதனை சாவடி அருகில், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஸ்கூட்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 17 கிலோ அளவுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான்பராக் உள்ளிட்டவை இருந்தது. விசாரணையில் பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து குட்கா மற்றும் ஒரு ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஓசூர் எம்.ஜி.சாலையை சேர்ந்த ரவிசங்கர் (33), பாபு (59) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து வாகன தணிக்கையை தீவிரபடுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post ஸ்கூட்டரில் குட்கா கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Gutka ,Hosur ,Hosur Sipkot police ,Jujuwadi ,Panbarak ,Dinakaran ,
× RELATED குட்கா பதுக்கி விற்ற கடைக்காரர் கைது