×

நீலகிரியில் மழை குறைந்ததால் மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி தீவிரம்

ஊட்டி : நீலகிரியில் மழை குறைந்த நிலையில், தற்போது மலை காய்கறிகளுக்கு மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதனை தொடர்ந்து, அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.

விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள், தொட்டிகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் அதிகமாக காணப்படும். இதனால், விவசாயிகள் தங்களது காய்கறி தோட்டங்களுக்கு தேவையான தண்ணீர் இயற்கையாகவே கிடைக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் குறித்த சமயத்தில் பருவமழை பெய்வதில்லை. சில சமயங்களில் காலம் தவறி பெய்கிறது. சில சமயங்ளில் அதிக மழை பெய்கிறது. மேலும், சில சமயங்களில் பருவமழை பெய்யாமல் பொய்த்து விடுகிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவிற்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. இதனால், மலைப்பங்கான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு இயற்கையான முறையில் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. மேலும், கடந்த நான்கு மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யாத நிலையில், விவசாய நிலங்களுக்கு செயற்கை முறையில் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ேமலும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது.இதனால், அனைத்து பகுதிகளிலும் நாள் தோறும் மலை காய்கறிகளுக்கு மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மலைப்பாங்கான பகுதிகளில் இது போன்று மைக்ரோ ஸ்பிரிங்கலர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post நீலகிரியில் மழை குறைந்ததால் மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Nilagiri ,Dinakaran ,
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...