×

வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள்: மாயாவதி அழைப்பு

லக்னோ: பொதுமக்கள் தங்களது வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அழைப்பு விடுத்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரான மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில்,‘‘வாக்களிப்பதற்கான உரிமை என்பது ஏழை, பலவீனமான மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்கள் தங்களை உயர்த்திக்கொள்வதற்கு உதவும் அதிகாரத்துக்கான பிரதான சாவியை பெறுவதற்கான ஜனநாயக சக்தியாகும்.

உங்களது மதிப்புமிக்க அரசியலமைப்பு உரிமையை அச்சமின்றி பயன்படுத்தி ஏழைகள், தொழிலாளிகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவும் வகையிலான பகுஜன் சார்பு அரசினை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உங்களுக்கு ஒரு வலுவான வேண்டுகோள் விடுக்கிறேன். கோயில், மசூதி என்ற பெயரிலோ அல்லது பணத்தின் சக்தியாலோ உங்களது வாக்குகள் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்யுங்கள். அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவதையும், ஆளும் கட்சியினரால் மாதிரி நடத்தை விதிகள் மீறப்படுவதையும் தடுக்க வேண்டியது அவசியமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள்: மாயாவதி அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Mayawati ,Lucknow ,Bahujan Samaj Party ,Chief Minister ,
× RELATED பாஜவுக்கு நல்ல நாட்கள் வந்தது,...