×

விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்கள் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை சற்று சரிவு..!!

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் இன்று காலை அனைத்து பூக்களின் விலை சரிந்தது. ஒரு கிலோ மல்லி 400 க்கும் ஐஸ் மல்லி, முல்லை 360க்கும் ஜாதி மல்லி 300 க்கும் கனாகம்பரம் 500 க்கும் அரளி பூ 250 க்கும் சாமந்தி 240 க்கும் சம்பங்கி, பன்னீர் ரோஸ் 120 க்கும் சாக்லேட் 140 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறியதாவது; விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்கள் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை சற்று சரிந்துள்ளது. வருகின்ற 21ம்தேதி சித்ரா பவுர்ணமி முன்னிட்டு மீண்டும் அனைத்து பூக்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பூக்களின் விலை சற்று குறைந்ததால் சென்னை மற்றும் புறநகர் சில்லறை வியாபாரிகள் மற்றும் இல்லதரிசிகள் மார்க்கெட்டுக்கு அதிகமாக வருகின்றனர். இவ்வாறு கூறினார்.

The post விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்கள் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை சற்று சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar ,Chennai ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மேம்பாலத்தில் தறிகெட்டு...