×

வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை மிகுந்த விழிப்புடன் செயலாற்ற வேண்டும்: திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: வாக்குப்பதிவு நாளான நாளை மிகுந்த விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், களத்தில் நமக்கு கிடைத்துள்ள ஆதரவு வாக்குகளாக பதிவாகி வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். நாளை வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை திமுகவினர் மிகுந்த விழிப்புடன் செயலாற்ற வேண்டும். வாக்குப்பதிவில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறை சரியாக அமைந்தால் திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகும். களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை எல்லாம் வாக்குகளாக மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை மிகுந்த விழிப்புடன் செயலாற்ற வேண்டும்: திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,DMK ,Chennai ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...