×

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் வாக்குச்சாவடி மையங்களில் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்..!!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் வாக்குச்சாவடி மையங்களில் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட பணிகள் மாலைக்குள் நிறைவடையும். சென்னையில் உள்ள 944 வாக்குப்பதிவு மையங்களில் 3719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி மையங்களில் சிசிடிவி கேமரா மூலம் வெப் காஸ்டிங் செய்வதற்கான ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் வரிசையில் நின்று செல்ல ஏதுவாக தடுப்புகள் அமைப்பு, சாமியானா பந்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாற்று திறனாளிகளை வாக்குப்பதிவு அறைக்கு அழைத்து செல்ல சக்கர நாற்காலிகள், சாய்வு தளம் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்குக் சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை கொண்டுவர துப்பாக்கி ஏந்திய போலீசார், வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. பணிகள் நிறைவடையாத ஒரு சில வாக்குச் சாவடிகளில் மாலைக்குள் நிறைவடையும் என்று அவர் தெரிவித்தார்.

 

The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் வாக்குச்சாவடி மையங்களில் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,District Election Officer ,Radhakrishnan ,Chennai.… ,Dinakaran ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...