×

பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை எழும்பூர் வாக்காளர் சிறப்பு ரயில் இயக்கம்

உடுமலை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை- சென்னை எழும்பூர் இடையே வாக்காளர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, 18ம் தேதி (வியாழன்) மற்றும் 20ம் தேதி (சனி) மாலை 4.25 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்படும் சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழநி, உடுமலை, பொள்ளாச்சி, போத்தனூர் வழியாக கோவை சென்றடையும்.

இந்த ரயில் உடுமலைக்கு மறுநாள் காலை 6.23 மணிக்கு வந்து, கோவைக்கு 8.20 மணிக்கு சென்றடையும். இதேபோல், கோவையில் இருந்து 19ம் தேதி (வெள்ளி) மற்றும் 21ம் தேதி (ஞாயிறு) புறப்படும் சிறப்பு ரயில் இதே வழித்தடத்தில் மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். இந்த ரயில் உடுமலைக்கு இரவு 10.30 மணிக்கு வந்து சேரும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

The post பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை எழும்பூர் வாக்காளர் சிறப்பு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Pollachi, Udumalai ,Udumalai ,Chennai ,Egmore ,Pollachi ,Chennai Egmore ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்