×

குட்கா விற்ற வாலிபர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா வேல்டு சிட்டி வீராபுரம் பகுதியில் உள்ள டீ கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் டீ கடையில் சோதனை செய்தனர். அப்போது, கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து புஷ்பராஜ் (34) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post குட்கா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Gutka ,Chengalpattu ,Mahendra Weld City Veerapuram ,Dinakaran ,
× RELATED லாரியில் கடத்தி வந்த 17 மூட்டை குட்கா பறிமுதல்