×

ஆவடி நகைக்கடையில் கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளையர்கள் இன்றைக்குள் பிடிபடுவார்கள்: தனிப்படை போலீசார் தகவல்

சென்னை: ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளையடிக்க கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் எண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவரின் நகைக்கடையில் நேற்று துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று பகல் 12:00 மணி அளவில், பிரகாஷ் கடையில் தனியாக இருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்துள்ளது

மாருதி ஸ்விப்ட் காரில், இரண்டு கைத் துப்பாக்கிகளுடன் வந்த 5 பேர் உள்ளே புகுந்து நகைக்கடையின் ஷட்டரை அடைத்து கொள்ளை அடித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்கள் வந்த காரின் எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். 8 தனிப்படைகள் அமைத்து போலீசார், கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். ஆவடி நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொள்ளையர்களை நெருங்கிவிட்டதாகவும் இன்றைக்குள் பிடிபடுவார்கள் என்றும் தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கொள்ளையடித்த பிறகு கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post ஆவடி நகைக்கடையில் கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளையர்கள் இன்றைக்குள் பிடிபடுவார்கள்: தனிப்படை போலீசார் தகவல் appeared first on Dinakaran.

Tags : Northern ,Avadi Jewellery ,Independent Police Information ,Chennai ,Avadi ,Prakash ,Muthapuppetta ,Dinakaran ,
× RELATED வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு...