×

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பெரம்பலூரில் தீயணைப்புதுறை சார்பில் நீத்தார் நினைவுநாள் அனுசரிப்பு

பெரம்பலூர், ஏப்.15: பெரம்பலூரில் தீயணைப் புத்துறை சார்பாக நீத்தார் நினைவுநாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பாக, தமிழகமெங்கும் ஏப்ரல் 14ம் தேதிமுதல் 20ம் தேதி வரை தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப் படு கிறது. இந்த தீ தொண்டு வாரத்தின் முதல் நாளான நேற்று(14ம்தேதி) நீத் தார் நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன்படி பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பாக, நேற்றுகாலை 7.30 மணிக்கு நீத்தார் நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடை பெற்றது. இதில் தமிழகத் தின் பல்வேறு பகுதிகளில் பணிகளின் போது உயிர் நீத்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப் பட்டது.

இதனையொட்டி பெரம்பலூர் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் வீரபாகு தலைமையில், நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலு வலர் (போக்குவரத்து) பழனிசாமி, சிறப்பு நிலை அலுவலர் செந்தில்குமார், சிறப்புநிலை அலுவலர் (போக்குவரத்து) துரைசாமி, முன்னணிதீயணைப்பாளர் இன்பரசன் மற்றும் தீய ணைப்புவீரர்கள் நினைவுத் தூணுக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

The post தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பெரம்பலூரில் தீயணைப்புதுறை சார்பில் நீத்தார் நினைவுநாள் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil New Year ,Neethar Memorial Day ,Perambalur ,Thiyanai Putura ,Tamil Nadu Fire and Rescue Department ,Fire Charity Week ,Tamil Nadu ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு