×

நாட்டுத்துப்பாக்கியை பதுக்கிய 2 பேர் கைது

ஊத்தங்கரை, ஏப்.15: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை போலீசார், படத்தானூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (45). திருப்பத்தூர் அருகே உள்ள அரங்கநாத வலசை சேர்ந்த தேவேந்திரன் (60) ஆகிய இருவரும் படத்தானூர் பகுதியில் வேட்டையாடுவதற்காக, வீட்டில் நாட்டு துப்பாக்கி மற்றும் கரி மருந்து 200 கிராம் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் நாட்டுதுப்பாக்கி மற்றும் கரி மருந்து, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாட்டுத்துப்பாக்கியை பதுக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Uthangarai ,Singarappet police ,Uthangarai, Krishnagiri district ,Patthanur ,Govindaraj ,Devendran ,Aranganatha Valasa ,Tirupathur ,Dinakaran ,
× RELATED மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு