×

போதை மறுவாழ்வு மையத்தில் மரணம்: 2 பேர் கைது

கோவை: கோவில்பாளையத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கிஷோர் என்பவர் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிஷோர் சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்ததால் அவரது கை, கால்களை கட்டிப் போட்டு துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. கிஷோர் மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில் போதை மறுவாழ்வு மைய பயிற்சியாளர், வார்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போதை மறுவாழ்வு மைய பயிற்சியாளர் ஜெப பிரசன்னராஜ், வார்டன் அரவிந்த் ஹரி ஆகியோர் கைதாகினர்.

The post போதை மறுவாழ்வு மையத்தில் மரணம்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Kishore ,Kovilpalayam ,rehabilitation center ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்