×

எல்.முருகன், சவுமியா அன்புமணி மீது வழக்கு

வேலூர்: தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளன. இந்தநிலையில் நீலகிரி தொகுதி பாஜ வேட்பாளர் எல்.முருகன் கடந்த 25ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அன்றைய தினமே எல்.முருகன் உரிய அனுமதி பெறாமல் விதிமுறை மீறி ஊட்டி அருகே உள்ள கடநாடு பகுதியில் கூட்டம் நடத்தினார். இதையடுத்து போலீசார் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் தேர்தல் விதிமுறைகளை மீறியதால் நடிகர் மன்சூர்அலிகான், சவுமியா அன்பு மணி, அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதால் பாஜ கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post எல்.முருகன், சவுமியா அன்புமணி மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : L. Murugan ,Soumiya Anbumani ,Vellore ,Tamil Nadu ,Puducherry ,Neelgiri ,Bajaj ,
× RELATED முதல்முறை வாக்காளர்கள் வேகமாக...