×

இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு; வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை: நகை வாங்குவோர் அதிர்ச்சி!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.51,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 5ம் தேதி சவரன் ரூ.48,120க்கு விற்பனையானது. இது வரலாற்றில் அதிகபட்ச விலை என்று கூறப்பட்டது. அதன் பிறகும் 8ம் தேதி ரூ.48,840, 9ம் தேதி ரூ.49,200 என்று எகிறியது. பின்னர் விலை சற்று குறைவதும், மறுநாளே அதிகரிப்பதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது. அதாவது, அன்றைய தினம் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.49,880க்கு விற்கப்பட்டது.

இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்சம் என்ற சாதனையை படைத்தது. அதன் பிறகு சற்று குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வந்தது. கடந்த 26ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.49,600க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6215க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,720க்கும் விற்கப்பட்டது. நேற்று மேலும் அதிரடியாக கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6250க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது. சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.51,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராம் ஒன்றின் விலை ரூ.140 அதிகரித்து ரூ.6,390க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் உயர்ந்து ரூ.80.50-க்கு விற்பனை ஆகிறது. இது வரலாற்றில் உச்சபட்சம் என்ற சாதனையை படைத்தது. சவரன் ரூ.50 ஆயிரம் ஆனது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இப்படியே விலை அதிகரித்தால் தங்கம் எட்டாக்கனியாகி விடுமோ என்ற அச்சம் நடுத்தர மக்களிடையே நிலவி வருகிறது.

The post இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு; வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை: நகை வாங்குவோர் அதிர்ச்சி! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...