×

ஆம் ஆத்மி தலைவர்களிடம் ஈடி விசாரணை

பனாஜி: டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்குடன் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் கோவா பிரிவு தலைவர் அமித் பலேகர், ஆம் ஆத்மி தலைவர் ராமராவ் வாக் மற்றும் தத்த பிரசாத் நாயக் மற்றும் அசோக் நாயக் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி 4 பேரும் நேற்று பனாஜியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.

The post ஆம் ஆத்மி தலைவர்களிடம் ஈடி விசாரணை appeared first on Dinakaran.

Tags : ED ,Aam Aadmi ,Panaji ,The Enforcement Directorate ,Delhi ,Aam Aadmi Party ,Goa ,Amit Palekar ,
× RELATED மதுபான கொள்கை வழக்கில் முக்கிய...