×

ரைஸ் மில் உரிமையாளர் வெட்டிக்கொலை

மதுரை, மார்ச் 29: மரம் வெட்டும் தகராறில், ரைஸ் மில் உரிமையாளரை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை, கீரைத்துறையைச் சேர்ந்தவர் சவுந்தரகுமார் (50). இவர், சிந்தாமணி சாலை, ராஜம்மாள் நகரில் லாரி கமிஷன் அலுவலகம் நடத்தி வந்தார். அவர் நேற்று தனது அலுவலகத்தில் இருந்தபோது, மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் சவுந்தரகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பினர். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து, தகவலறிந்த கீரைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த படுகொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட சவுந்தரகுமார், லட்சுமி என்ற பெயரில் ரைஸ் மில் நடத்தி வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன், லாரி கமிஷன் அலுவலகமும் துவங்கியுள்ளார். சவுந்தரகுமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே நீண்ட நாட்களாக கருவேல மரங்களை வெட்டுவது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

The post ரைஸ் மில் உரிமையாளர் வெட்டிக்கொலை appeared first on Dinakaran.

Tags : Rice mill ,Madurai ,Soundarakumar ,Keeraithurai, Madurai ,Lorry Commission ,Chintamani Road, Rajammal Nagar ,Rice ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை