×

விபத்தில் சிக்கிய மாணவர் பலி தனியார் மருத்துவமனை மீது தாக்குதல்

மதுரை, மார்ச் 29: மதுரை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (17), நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பருடன் கல்லூரிக்கு அச்சம்பத்து வழியாக சென்றபோது, இருவரும் விபத்தில் சிக்கினர். காயமடைந்த இருவரும் மதுரை, காளவாசல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த மாணவர் ஹரிஹரன் நேற்றிரவு உயிரிழந்தார். தகவலறிந்த சக மாணவர்கள் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை முன்பாக குவிந்தனர்.

சிகிச்சையில் குறைபாடு இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மருத்துவமனையின் முகப்பு கண்ணாடி நொறுக்கப்பட்டது. மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் விரைந்து வந்து மாணவர்களை சமாதானப்படுத்தியதுடன், இறந்த மாணவரின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

The post விபத்தில் சிக்கிய மாணவர் பலி தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Hariharan ,Sammattipuram, Madurai ,Pudukottai, Nagamalai ,Achhampathu ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை